Sunday, December 13, 2009

அடை மழையினால் திருக்கோவில் தம்பிலுவில் பிரதேசங்களில் 8426 குடும்பங்கள் பாதிக்கபட்டுள்ளனர்

9:41 PM

அடை மழையினால் திருக்கோவில் தம்பிலுவில் பிரதேசங்களில் 8426  குடும்பங்கள் பாதிக்கபட்டுள்ளனர்





அம்பாறை மட்டக்களப்பில் அடைமழை 52,000 குடும்பங்கள் இடம் பெயர்வு

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் சில தினங்களாக பெய்துவரும் அடை மழைகாரணமாக இதுவரை 52,000 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அம்பாறை மாவட்டத்தில் 52,218 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1200 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 200 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


பிரதேச செயலக பிரிவு ரீதியாக கல்முனை- 7565, காரைதீவு- 2595;, சாய்ந்தமருது-6566, நிந்தவூர்- 7000, அட்டாளைச்சேனை- 5842, ஆலையடிவேம்பு- 5009 , திருக்கோவில்- 8426 சம்மாந்துறையில் 9,895 குடும்பங்களுமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என அம்பாறை பதில் அரச அதிபர் தெரிவித்துள்ளார்

பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் 6200 குடும்பங்களும், நாவிதன்வெளியில் 1800 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to “அடை மழையினால் திருக்கோவில் தம்பிலுவில் பிரதேசங்களில் 8426 குடும்பங்கள் பாதிக்கபட்டுள்ளனர்”

Post a Comment