Thursday, April 8, 2010

அக்கரைப்பற்றில் துன்புறுத்தலுக்குள்ளாகும் தமிழ் யுவதிகள்

12:14 PM

அக்கரைப்பற்று நகரில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் பஸ்ஸ{க்காக காத்துநிற்கும் தமிழ் பெண்கள் அப்பகுதியில் ஆட்டோ தரிப்பிடத்தில் உள்ள முஸ்லிம் ஆட்டோ சாரதிகளினால் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை இரவு அக்கரைப்பற்று பஸ் நிலையத்தில் அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலையில் பயிலும் மலைய பகுதிக்கு செல்லவிருந்த ஆசிரிய பயிலுனர் தமிழ் யுவதிகள் சிலரை அவ்விடத்தில் மதுபோதையில் நின்ற முஸ்லிம் ஆட்டோ சாரதிகள் வழிமறித்து குறித்த பெண்களை தூஸன வார்த்தைகளினால் திட்டியதுடன் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் குறித்த யுவதிகள் அவ்வழியால் சென்ற ஆசிரியர் ஒருவரிடம் இது தொடர்பில் முறையிட்டு அவர் மூலம் கிழக்கு மாகாண அமைச்சர் நவரெட்னராசாவின் கவனத்துக்கு இச்சம்பவம் கொண்டுசெல்லப்பட்டது.

அவர் அக்கரைப்பற்று பொலிஸாரிடம் முறையிட்டு அக்கரைப்பற்று பொலிஸாரின் துணையுடன் அப்பகுதிக்கு சென்று இது தொடர்பில் விசாரணைசெய்தபோது குறித்த ஆட்டோசாரதிகள் நவரெட்னராசாவை தாக்கமுற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சமயத்தில் குறித்த இடத்தில் நின்ற பொலிஸாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் விசாரணைக்கு வந்த பொலிஸாரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் திரும்பிச்சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளபோதிலும் இது தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லையெனவும் இதற்கு  அரசியல் தான் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இது இணையதளத்தில் இருந்து பெறப்பட்ட செய்தி ...!!!!!  
http://www.swissmurasam.net/news/breckingnews/20488-2010-04-07-05-46-54.html

1 Responses to “அக்கரைப்பற்றில் துன்புறுத்தலுக்குள்ளாகும் தமிழ் யுவதிகள்”

Anonymous said...
April 8, 2010 at 5:40 PM

These are all lies and all these about Politics (Politricks)...politicians tricking the public and playing games..to get votes...
Unfortunately, www.swissmurasam.net is taking part of this!!

What a shame Swissmurasam!!!


Post a Comment